சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு!

Tenkasi Recruitment 2024

தென்காசி மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட சமூக நல அலுவகத்தின் கீழ் இயங்கும் One Stop Centre-ல் காலியாக உள்ள வழக்கு பணியாளர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.07.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tenkasi.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் சமூக நலன் & மகளிர் உரிமைத் துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 04
கடைசி தேதி 20.07.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://tenkasi.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. வழக்கு பணியாளர் 02
2. பாதுகாவர் 01
3. பல்நோக்கு உதவியாளர் 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. வழக்கு பணியாளர்:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் சமூகப்பணி அல்லது உளவியல் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 01 வருட அனுபவம் சம்மந்தப்பட்ட துறையில் பெற்றிருக்க வேண்டும்.

2. பாதுகாவலர்:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு  தேர்ச்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் 4 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பல்நோக்கு உதவியாளர்::

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 01 வருட சமையல் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. வழக்கு பணியாளர் ₹. 18,000/-
2. பாதுகாவர் ₹. 12,000/-
3. பல்நோக்கு உதவியாளர் ₹. 10,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தென்காசி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட சமூகநல அலுவலகம், 140/5பி, ஸ்ரீ சக்திநகர், தென்காசி - 627 811.

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்


கடைசி தேதி: 20.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter