-->

தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகள். உடனே விண்ணப்பியுங்கள்!!!

Admin
By -
0

தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகள்:- அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 18 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை https://ariyalur.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 18.01.2023.

தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகள்
தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகள்

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, அரியலூர்.
வகை TN Govt Jobs
பணியின் பெயர் இடைநிலை ஆசிரியர்
காலியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

வெலிங்டன்

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 18 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. இடைநிலை ஆசிரியர் - 18 காலியிடங்கள்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கான நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி அதன்படி கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அல்லது வரையறுக்கப்பட்ட தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அந்தந்த பகுதிகளில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

வயது வரம்பு தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.7,500/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரியலூர் மாவட்டத்தின் இணையதளமான https://ariyalur.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து விண்ணப்பப் படிவத்துடன் அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 18.01.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
அறை எண்:35,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்,
அரியலூர்.

Download Notification PDF

கடைசி தேதி: 18.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)