தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மதுரை மண்டலத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.01.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
![]() |
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு |
Page Contents
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மதுரை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | 1. பட்டியல் எழுத்தர் 2. உதவுபவர் 3. காவலர் |
காலியிடங்கள் | 450 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் நிரந்தர வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!! |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 450 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பட்டியல் எழுத்தர் - 150 காலியிடங்கள்
- உதவுபவர் - 150 காலியிடங்கள்
- காவலர் - 150 காலியிடங்கள்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. பட்டியல் எழுத்தர்:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. உதவுபவர்:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. காவலர்:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.07.2022 தேதியின்படி SC/ST/SC(A) பிரிவினருக்கு 18 முதல் அதிகபட்சமாக 37 வயதிற்குள்ளும், MBC/BC/BC(M) பிரிவினருக்கு 18 முதல் அதிகபட்சமாக 34 வயதிற்குள்ளும், OC பிரிவினருக்கு 18 முதல் அதிகபட்சமாக 32 வயதிற்குள்ளும், இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
1. பட்டியல் எழுத்தர்:- இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய். 5,285/- + DA - ரூ.3,499/- + TA ரூ.120/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. உதவுபவர் மற்றும் காவலர்:- இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய். 5,218/- + DA - ரூ.3,499/- + TA ரூ.100/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
மதுரை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண் மற்றும் பெண்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் விபரங்கள்
- 1. பட்டியல் எழுத்தர்:- மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு செய்தவர்கள் - 18.01.2023 காலை 10.00 மணி
பொது விண்ணப்பதாரர்கள் - 19.01.2023 காலை 10.00 மணி
- 2. உதவுபவர்:- மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு செய்தவர்கள் - 20.01.2023 காலை 10.00 மணி
பொது விண்ணப்பதாரர்கள் - 21.01.2023 காலை 10.00 மண
- 3. காவலர்:- மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு செய்தவர்கள் - 23.01.2023 காலை 10.00 மணி
பொது விண்ணப்பதாரர்கள் - 24.01.2023 காலை 10.00 மணி
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 10.01.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,
10, குருவிக்காரன் சாலை,
அண்ணநகர்,
மதுரை-20.
கடைசி தேதி: 10.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments