தமிழக அரசு பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு. கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் பிற தகவல்களுடன்!

Admin
By -
0

தமிழக அரசு பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு. கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் பிற தகவல்களுடன்!

தமிழக அரசு பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு.
தமிழக அரசு பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு. கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் பிற தகவல்களுடன்!

தமிழக அரசு பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு:- பொது சுகாதாரம், மாவட்ட நலச்சங்கம், நாகப்பட்டினம் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள வட்டார கணக்கு உதவியாளர், நகர்புற துணை செவிலியர், மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பத்திரிக்கை செய்தி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து இந்த பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பத்திரிக்கை செய்திகள் நாகப்பட்டினம் மாவட்ட இணையதளமான www.nagapattinam.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.11.2022.

Follow us on Google News

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழக அரசு பொது சுகாதாரத் துறை, நாகப்பட்டினம்.
வகை TN Govt Jobs
பணியின் பெயர் வட்டார கணக்கு உதவியாளர்
நகர்புற துணை செவிலியர்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
காலியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு

பொது சுகாதாரத் துறை பணிக்கான காலியிடங்கள்:

மேற்கண்ட பணியிடங்களுக்கான காலியிட விபரங்கள் பின்வருமாறு:-

  • நகர்புற துணை செவிலியர் - 08 காலியிடங்கள்
  • வட்டார கணக்கு உதவியாளர் - 01 காலியிடம்
  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 02 காலியிடங்கள்
  • பொது சுகாதாரத் துறை பணிக்கான கல்வித்தகுதி:

    1. நகர்புற துணை செவிலியர்:-

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கல்வித்தகுதி ஆனது 15.11.2012 க்கு முன் தேர்ச்சி பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத துணை செவிலியர் பயிற்சி அல்லது பல்நோக்கு சுகாதார பணியாளர் (பெண்) பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

    15.11.2012 க்கு பின் தேர்ச்சி பெற்றவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு துணை செவிலியர் பயிற்சி அல்லது பல்நோக்கு சுகாதார பணியாளர் (பெண்) பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

    தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிய பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் பணிபுரிய முழு உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

    2. வட்டார கணக்கு உதவியாளர்

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இளங்கலை வணிகவியல் (Bachelor of Commerce) பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். Tally பயிற்சி முடித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும். தமிழ் மற்றும் ஆங்கிலம் (Tamil & English) தட்டச்சு, கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

    இந்தப் பணியை பொருத்தவரைக்கும் தமிழில் எழுத படிக்க தெரிந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொது சுகாதாரத் துறை பணிக்கான ஊதிய விவரம்:

    இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேசிய நலக் குழுமம் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொது சுகாதாரத் துறை பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

    இந்தப் பணிகளுக்கு என எந்தவிதமான கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொது சுகாதாரத் துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

    இந்த பணிகள் அனைத்தும் முற்றிலும் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொது சுகாதாரத் துறை பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

    இந்த பணிகளுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்துடன் கல்வி மற்றும் தொழில் நுட்பத் தகுதி சான்று, சாதி சான்று ஆகிய சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் இட்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ரூபாய்.10/- காண தபால்தலை ஒட்டிய உறை சுய முகவரியுடன் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொது சுகாதாரத் துறை பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர்,
    துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
    மாவட்ட ஆட்சியரகம் முதல் நுழைவாயில்,
    நாகப்பட்டினம் - 611 003.

    Download Notification PDF

    கடைசி தேதி: 25.11.2022

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)