மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!
![]() |
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்! |
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை:- திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்கு பணியாளர்-1, வழக்கு பணியாளர்-2, பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் பதவிகளை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அதற்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை திண்டுக்கல் மாவட்ட இணையதளமான www.dindigul.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.11.2022 மாலை 05.45- க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | மாவட்ட சமூக நல அலுவலகம், திண்டுக்கல் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | வழக்கு பணியாளர்-1, வழக்கு பணியாளர்-2, பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர். |
காலியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்! |
சமூக நல அலுவலகத்தில் பணிக்கான காலியிடங்கள்:
காலியிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:
சமூக நல அலுவலகத்தில் பணிக்கான கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
1. வழக்கு பணியாளர்-1 & வழக்கு பணியாளர்-2
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் கல்வித் தகுதி இளங்கலை சட்டம், சமூகப்பணி, சமூக அறிவியல், சமூகவியல், உளவியல் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.(Bachelor in Law/Social Work/Sociology/Social Science/Psychology). அரசு அல்லது அரசு சாரா திட்டம் அல்லது திட்டத்தில் பெண்கள் தொடர்பான தொடர்புடைய டொமைன்களில் பணிபுரிந்த குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் தேவை.
2. பாதுகாவலர் & பல்நோக்கு உதவியாளர்
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நல அலுவலகத்தில் பணிக்கான வயது வரம்பு:
இந்த அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக நல அலுவலகத்தில் பணிக்கான ஊதிய விவரம்:
சமூக நல அலுவலகத்தில் பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிகளுக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக நல அலுவலகத்தில் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக நல அலுவலகத்தில் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் இணையதளமான www.dindigul.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவத்துடன் சான்றிதழ்களின் நகல்களை சுய ஒப்பமிட்டு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக நல அலுவலகத்தில் பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை,
அறை எண்.88, (தரைதளம்),
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
திண்டுக்கல் மாவட்டம்-624 004
Download Notification & Application Format PDF
கடைசி தேதி: 25.11.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Response to "மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!"
Post a Comment