மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

Admin
By -
0

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

District Child Protection Office Recruitment
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முழு தகவல்களுடன்!!!

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12.12.2022 இந்த பதவிக்கான பத்திரிகை செய்தியை www.erode.nic.in என்கிற ஈரோடு மாவட்டத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Join our Whatsapp Group
Join our Telegram Group
Follow us on Instagram
Follow us on Google News
Join our Facebook Group
Subscribe our Youtube Channel

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஈரோடு
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பாதுகாப்பு அலுவலர்
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் காவலர் காலியிடங்கள் அறிவிப்பு. உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

பாதுகாப்பு அலுவலர் பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிக்கான மொத்த காலி இடம் ஒன்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அலுவலர் பணிக்கான கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் - (சமூகப்பணி, சமூகவியல், குழந்தைமேம்பாடு, மனித உரிமைகள், பொது நிர்வாகம், உளவியல், சட்டம். பொது சுகாதாரம், சமூகவள முகாமைத்துவம்) பெற்றிருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கணினி பயன்பாட்டில் (Profiency in Computer) திறன் மிக்கவராக இருத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அலுவலர் பணிக்கான வயது வரம்பு:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண் பெண் விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அலுவலர் பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய். 27,804/- வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அலுவலர் பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிக்கான எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவிக்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அலுவலர் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஈரோடு மாவட்டத்தில் இணையதளமான https://erode.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள் அனுபவம் சான்று நகல்கள் மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 12.12.2022 ஆம் தேதி மாலை 05.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அலுவலர் பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
புதிய கட்டிடம் 6வது மாடி,
ஈரோடு.

Download Application PDF

கடைசி தேதி: 12.12.2022

Join our below-given groups for all the latest Jobs

Join our Whatsapp Group
Join our Telegram Group
Follow us on Instagram
Follow us on Google News
Join our Facebook Group
Subscribe our Youtube Channel

Post a Comment

0Comments

Post a Comment (0)