
தென்காசி மாவட்டத்தில் 2025 - 2026 மறு சீரமைக்கப்பட்ட இராஷ்ட்ரிய கிராம் சுவராஜ் அபியான் (ஆர்.ஆர்.ஜி.ஏ) திட்டத்தின் கீழ் வெளி நிரவல் முறையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.05.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tenkasi.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | ஊரக வளர்ச்சி துறை, தென்காசி |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 12 |
கடைசி தேதி | 30.05.2025 |
விண்ணப்ப முறை | Google Form |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
மாவட்ட வள மைய அலுவலர் | 01 |
கணினி உதவியாளர் | 01 |
வட்டார வள மைய பயிற்றுநர் | 10 |
🔊 Read aslo: தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தில் 262 ஓட்டுநர் (Driver) காலியிடங்கள் அறிவிப்பு!🔊
பணிக்கான தகுதி விபரங்கள்:-
1. மாவட்ட வள மைய அலுவலர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் MSW / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டு பயிற்சி ஒருங்கிணைப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. கணினி உதவியாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பு (with DTP) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 3 ஆண்டு பனி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. வட்டார வள மைய பயிற்றுநர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SIRD மூலம் பயிற்சி பெற்ற பயிற்றுநர் அல்லது பிற அரசு திட்டத்தில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
மாவட்ட வள மைய அலுவலர் | ₹.50,000/- |
கணினி உதவியாளர் | ₹.22,000/- |
வட்டார வள மைய பயிற்றுநர் | ₹.15,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
மாவட்ட வள மைய அலுவலர் | குறிப்பிடவில்லை |
கணினி உதவியாளர் | குறிப்பிடவில்லை |
வட்டார வள மைய பயிற்றுநர் | குறிப்பிடவில்லை |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தென்காசி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை Google Form-ல் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு 30.05.2025 மாலை 5.00 மணிக்குள் Google Form சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
கடைசி தேதி | 30.05.2025 |
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
மாவட்ட வள மைய அலுவலர் | Google Form |
கணினி உதவியாளர் | Google Form |
வட்டார வள மைய பயிற்றுநர் | Google Form |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |

0 Response to "தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!"
Post a Comment