அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் வேலை வாய்ப்பு

      

தமிழ் நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு

TNHRCE Recruitment 2024: அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், கோவையில் காலியாக உள்ள கணினி இயக்குநர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு


நிறுவனம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், கோவை
பதவியின் பெயர்
கணினி இயக்குநர் மற்றும் இரவுக் காவலர்
காலியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

பதவியின் பெயர் காலியிடங்கள்
இரவுக் காவலர் 02
கணினி இயக்குநர்01

கல்வித்தகுதி:

1. கணினி இயக்குநர்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட கணினி அறிவியல் பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் தட்டச்சு அறிந்திருத்தல் வேண்டும்.

2. இரவுக் காவலர்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரங்கள்:

பதவியின் பெயர்வயது வரம்பு
கணினி இயக்குநர்விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இரவுக் காவலர்விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவியை தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள்:

பதவியின் பெயர் சம்பள விகிதம்
இரவுக் காவலர் ₹.11600 - 36800/-
கணினி இயக்குநர்₹.15300 - 48700/-

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 19.02.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கான விண்ணப்பப்படிவத்தினை திருக்கோயில் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அறிவிப்பாணை மற்றும் விண்ணப்படிவம் Click to Download