தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு:- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இராணிப்பேட்டை மண்டலத்தில் காலியாக உள்ள பருவகால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவகால காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தும் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பருவகால காவலர் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 03.05.2023.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் 10.04.2023 முதல் அலுவலக நாட்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இராணிப்பேட்டை மாவட்டம்.
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. பருவகால பட்டியல் எழுத்தர்
2. பருவகால காவலர்
காலியிடங்கள் 160
கடைசி தேதி 03.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 160 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. பருவகால பட்டியல் எழுத்தர் - 80 காலியிடம்
  2. பருவகால காவலர் - 80 காலியிடங்கள்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. பருவகால பட்டியல் எழுத்தர்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை அறிவியல், வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பருவகால காவலர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

1. பருவகால பட்டியல் எழுத்தர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2022 தேதியின்படி SC / ST/ SC(A) பிரிவினருக்கு அதிகபட்சமாக 37 வயதிற்குள்ளும், MBC / DNC / BC / BC(M) பிரிவினருக்கு அதிகபட்சமாக 34 வயதிற்குள்ளும், பொது பிரிவினருக்கு அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2. பருவகால காவலர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2022 தேதியின்படி SC / ST/ SC(A) பிரிவினருக்கு அதிகபட்சமாக 37 வயதிற்குள்ளும், MBC / DNC / BC / BC(M) பிரிவினருக்கு அதிகபட்சமாக 34 வயதிற்குள்ளும், பொது பிரிவினருக்கு அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

1. பருவகால பட்டியல் எழுத்தர்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.5285/- + ரூ.3449/- (அகவிலைப்படி) மற்றும் நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.120/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. பருவகால காவலர்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.5218/- + ரூ.3449/- (அகவிலைப்படி) மற்றும் நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.100/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நான்காவது A BLOCK, இராணிப்பேட்டை மாவட்டம் அலுவலகத்தில் 10.04.2023 நாள் முதல் அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பப்படிவத்தை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், பிறப்பு சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், நன்னடத்தை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், அனுபவம் சான்று நகல்கள், முன்னுரிமை சான்றிதழ் நகல் மற்றும் பிற சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து 03.05.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நான்காவது A BLOCK,
இராணிப்பேட்டை மாவட்டம்.

கடைசி தேதி 03.05.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter