-->

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலை. உடனே விண்ணப்பியுங்கள்!!!

Admin
By -
0

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலை:- தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு (பத்திரிக்கை செய்தி) ஈரோடு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது இந்த பதவிகளுக்கான பத்திரிகை செய்தி மற்றும் விண்ணப்ப படிவங்களை https://erode.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.04.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலை
தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலை

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலை, ஈரோடு
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 06
கடைசி தேதி 28.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://erode.nic.in/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 06 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி காலியிடங்கள்
முதுநிலை ஆலோசகர் 01
வழக்கு பணியாளர் 02
பாதுகாவலர் 01
பல்நோக்கு உதவியாளர் 02

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. முதுநிலை ஆலோசகர்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் சட்டம் / முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சாராத நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான மூன்று வருட அனுபவம் மிக்க பெண்கள் மட்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கு பணியாளர்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் சமூக பட்டப் படிப்பு / முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சாராத நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான 01 வருட அனுபவம் மிக்க பெண்கள் மட்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாவலர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உள்ளூரில் வசிப்பவராகவும் அரசாங்கத்தில் அல்லது பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். கல்வி தகுதி இந்த பதவிக்கு தேவை இல்லை. பெருந்துறை மற்றும் ஈரோடு பகுதியில் சார்ந்தவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்நோக்கு உதவியாளர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு (பெண்கள் மட்டும்) மற்றும் சமையல் தெரிந்தவராகவும், உள்ளூரில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இந்த பதவிக்கு கல்வி தகுதி தேவையில்லை. பெருந்துறை மற்றும் ஈரோடு பகுதி சார்ந்தவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பதவிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் பத்திரிகை செய்தியில் குறிப்பிடவில்லை.

பணிக்கான ஊதிய விவரம்:-

பதவி ஊதியம்
முதுநிலை ஆலோசகர் Rs.20,000/-
வழக்கு பணியாளர் Rs.15,000/-
பாதுகாவலர் Rs.10,000/-
பல்நோக்கு உதவியாளர் Rs.6400/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஈரோடு மாவட்டத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் பத்திரிகை செய்தியில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் முறையாக பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், பிறப்பு சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், நன்னடத்தை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், அனுபவம் சான்று நகல்கள், முன்னுரிமை சான்றிதழ் நகல் மற்றும் பிற சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து 28.04.2023 அன்று மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
ஆறாவது தளம்,
ஈரோடு - 624 011.

Notification & Application Form Click Here
கடைசி தேதி 28.04.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)