-->

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியங்கள்!!!

Admin
By -
0

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு:- தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிறப்வுவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://thoothukudi.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.04.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தூத்துக்குடி
Notification No. ந.க.எண்.வ6/31947/2022
நாள்.07.03.2023
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. ஈப்பு ஓட்டுநர்
2. அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் 13
கடைசி தேதி 10.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://thoothukudi.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 13 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. ஈப்பு ஓட்டுநர் - 03 காலியிடங்கள்
  2. அலுவலக உதவியாளர் - 10 காலியிடங்கள்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

ஈப்பு ஓட்டுநர்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 வருடம் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

ஈப்பு ஓட்டுநர்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.07.2022 தேதியின் படி பொதுபிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும், ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் ஆதிதிராவிடர் அருந்ததியர் / ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / ஆதிதிராவிடர் ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

அலுவலக உதவியாளர்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.07.2022 தேதியின் படி பொதுபிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 34 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும், ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் ஆதிதிராவிடர் அருந்ததியர் / ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / ஆதிதிராவிடர் ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

ஈப்பு ஓட்டுநர்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.19,500/- - 62,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15,700/- - 50,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://thoothukudi.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 10.04.2023 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு),
இரண்டாம் தளம் - கோரம்பள்ளம்,
தூத்துக்குடி - 628 101.

Download Notification PDF
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.04.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)