-->

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

Admin
By -
0

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு:- செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர்கள் (Jeep Drivers) நேரடி நியமனம் மூலம் நிரப்பிட செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://chengalpattu.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, செங்கல்பட்டு
Notification No. ந.க.எண்.1634/2021/uஅ4
நாள்.14.02.2023
வகை TN Govt Jobs
பணியின் பெயர் ஈப்பு ஓட்டுநர்
(Jeep Driver)
காலியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://chengalpattu.nic.in/

அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை. முழு விவரங்களுடன்!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) - 04 காலியிடங்கள்

ஈப்பு ஓட்டுநர் பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.07.2022 தேதியின் படி

  1. பொதுப் பிரிவினர் - குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) - குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  4. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  5. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் - குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.19,500/- நிலை-8 (ரூ.19,500 - 62,000/-) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈப்பு ஓட்டுநர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனசுழற்சி முறையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தின் இணையதளமான https://chengalpattu.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 08.03.2023 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய முகவரியுடன் கூடிய ரூபாய்.30/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
நூலக கட்டிடம் இரண்டாவது தளம்,
மருத்துவக் கல்லூரி வளாகம்,
செங்கல்பட்டு - 603 001.

Download Notification PDF

விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 08.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)