-->

மாநகராட்சியில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்!!!

Admin
By -
0

மாநகராட்சியில் வேலை வாய்ப்புகள்:- கோயம்புத்தூர் மாநகராட்சியானது பொது சுகாதார பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் மற்றும் மருந்தாளுநர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பணியில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டிய தேதி 27.01.2023.

Coimbatore City Municipal Corporation Recruitment 2023
Coimbatore City Municipal Corporation Recruitment 2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் கோயம்புத்தூர் மாநகராட்சி
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. செவிலியர்
2. மருந்தாளுநர்
காலியிடங்கள் 26
நேர்காணல் தேதி 27.01.2023
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு.

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 26 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. செவிலியர் - 20 காலியிடங்கள்
  2. மருந்தாளுநர் - 06 காலியிடங்கள்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

செவிலியர்:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் டிப்ளமோ செவிலியர் மருத்துவம் (Diploma General Nursing Mid Wives) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயம் தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மருந்தாளுநர்:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பார்மஸி இளங்கலை / டிப்ளமோ (Bachelor or Diploma Pharmacy) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயம் தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று, அனுபவம் சான்று, இருப்பிட சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, கொரோனா பணி சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ் அசல் மற்றும் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 27.01.2023 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் கோவை மாநகராட்சி பிரதான அலுகத்தில் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும் முகவரி:-

கோவை மாநகராட்சி அலுவலகம்,
கோவை.

நேர்கானல் தேதி: 27.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)