-->

அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்.

Admin
By -
0

அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்.

அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு:- ஈரோடு அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிக்கான விண்ணப்ப படிவத்தை https://skilltraining.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.12.2022.

அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு
அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு.
வகை TN Govt Jobs
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
(Office Assistant)
காலியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பணிகளுக்கான மொத்த காலியிடங்கள் 2 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2022 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் பொதுப் பிரிவினருக்கு அதிகபட்சமாக 32 வயதிற்குள்ளும், BC, MBC/DNC பிரிவினருக்கு 34 வயதிற்குள்ளும், SC, SC(A), ST பிரிவினருக்கு 37 வயதிற்குள்ளும், SSLC- க்கு மேல் கல்வித்தகுதி உடைய BC, MBC, SC, SC(A), ST வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை, முன்னாள் ராணுவத்தினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) பிரிவினருக்கு 53 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், OC, BC, MBC பிரிவினருக்கு 48 வயதிற்குள்ளும், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பு கூடுதலாக 10 ஆண்டுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

பணிக்கான ஊதிய விவரம்:-

Level - 1 (Rs.15,700 - 58,100)

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கான எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கான விண்ணப்ப படிவத்தை https://skilltraining.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவில் புகைப்படம் ஒட்டி கல்வி தகுதி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், அனுபவ சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பிற சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

முதல்வர்,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,
காசிபாளையம்,
ஈரோடு-638 009.

Download Application Form

கடைசி தேதி: 30.12.2022

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)