தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) வேலைவாய்ப்பு. முழுத்தகவல்கள்!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்! |
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) வேலைவாய்ப்பு: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை hrce.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகள் அனைத்தும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருக்கோயில் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று ரூபாய்.100/- செலுத்தி விண்ணப்பப் படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. . விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26.11.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | இந்து சமய அறநிலைய துறை, சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில், சென்னை. |
வகை | tnhrce recruitment |
பணியின் பெயர் | பல்வேறு பணிகள் |
காலியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE CHENNAI பணிக்கான காலியிடங்கள்:
காலிப் பணியிடங்களுக்கான விபரங்கள் பின்வருமாறு.
TNHRCE CHENNAI பணிக்கான கல்வித்தகுதி:
1. ஓதுவார்:-
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும் சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பாடப்பிரிவை முடித்து அதற்கான தேவரபள்ளி வழங்குகின்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
2. பரிச்சாரகர்:-
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். கோயிலின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்கவேண்டும். பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
3. காவலர்:-
தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். காவலர் பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
4. இரவு காவலர்:-
தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். காவலர் பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
5. திருவலகு:-
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். துப்புரவு பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
6. கால்நடை பராமரிப்பாளர்:-
தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
TNHRCE CHENNAI பணிக்கான வயது வரம்பு:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE CHENNAI பணிக்கான ஊதிய விவரம்:
TNHRCE CHENNAI பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருக்கோயில் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று ரூபாய்.100/- செலுத்தி விண்ணப்பப் படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TNHRCE CHENNAI பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TNHRCE CHENNAI பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருக்கோயில் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று ரூபாய்.100/- செலுத்தி விண்ணப்பப் படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்ப படிவத்துடன் தொடர்புடைய சான்றிதழ்கள் சுய ஒப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
TNHRCE CHENNAI பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,
315, தங்கசாலை தெரு,
சென்னை-600 003.
கடைசி தேதி: 26.11.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments