தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

Ariyalur Child Care Recruitment 2025

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 18 அங்கன்வாடி பணியாளர்கள், 04 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 24 அங்கன்வாடி உதவியாளர்கள் நேரடி நியமனம் மூலம் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.04.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ariyalur.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் குழந்தை வளர்ச்சி திட்டம், அரியலூர்
வகை TN Jobs
பணியின் பெயர் 1. அங்கன்வாடி பணியாளர்கள்
2. குறு அங்கன்வாடி பணியாளர்கள்
3. அங்கன்வாடி உதவியாளர்கள்
காலியிடங்கள் 46
கடைசி தேதி 23.04.2025
விண்ணப்ப முறை தபால்


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. அங்கன்வாடி பணியாளர் 18
2. குறு அங்கன்வாடி பணியாளர் 04
3. அங்கன்வாடி உதவியாளர் 24
தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தில் 262 சமையல் உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!

பணிக்கான தகுதி விபரங்கள்:-

அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியும் அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. அங்கன்வாடி பணியாளர் ₹.7700 - 24200/-
2. குறு அங்கன்வாடி பணியாளர் ₹.4100 - 12500/-
3. அங்கன்வாடி உதவியாளர் ₹.5700 - 18000/-

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. அங்கன்வாடி பணியாளர் 25 - 35-குள்
விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்சி / எஸ்டி வகுப்பினருக்கு அதிகபட்சமாக 40 வயது வரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக 38 வயது
2. குறு அங்கன்வாடி பணியாளர் 25 - 35-குள்
விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்சி / எஸ்டி வகுப்பினருக்கு அதிகபட்சமாக 40 வயது வரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக 38 வயது
3. அங்கன்வாடி உதவியாளர் 20 - 40-குள்
விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்சி / எஸ்டி வகுப்பினருக்கு அதிகபட்சமாக 45 வயது வரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக 43 வயது

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரியலூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் / திட்டம் / குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து சான்றிதழ்களில் சுயசான்றொப்பமிட்டு நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

  1. பள்ளி மாற்றுச் சான்றிதழ்
  2. SSLC மதிப்பெண் சான்றிதழ்
  3. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  4. குடும்ப அட்டை
  5. இருப்பிடச் சான்று
  6. ஆதார் அட்டை
  7. சாதிச் சான்று
  8. விதவை / கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்றோர் பெண்கள் சான்றிதழ்
  9. மாற்றித் திறனாளிகள், அதற்கான சான்றிதழ்

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

கடைசி தேதி 23.04.2025
அறிவிப்பாணை க்ளிக் செய்க


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter


0 Response to "தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!"

Post a Comment