சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.02.2025 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://salem.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம், சேலம் |
அறிவிப்பு எண். | -- |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | 1. முதன்மை ஆலோசகர் 2. வழக்கு பணியாளர் 3. பல்நோக்கு உதவியாளர் |
காலியிடங்கள் | 07 |
நேர்காணல் தேதி | 10.02.2025 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. முதன்மை ஆலோசகர் | 01 |
2. வழக்கு பணியாளர் | 04 |
3. பல்நோக்கு உதவியாளர் | 02 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. முதன்மை ஆலோசகர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக் கழகத்தில் முதுகலை சமூகப்பணி மற்றும் உளவியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
2. வழக்கு பணியாளர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக் கழகத்தில் இளங்கலை / முதுகலை சமூகப்பணி மற்றும் உளவியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
3. பல்நோக்கு உதவியாளர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். நன்கு சமைக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. முதன்மை ஆலோசகர் | ₹.22,000/- |
2. வழக்கு பணியாளர் | ₹.18,000/- |
3. பல்நோக்கு உதவியாளர் | ₹.10,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. முதன்மை ஆலோசகர் | 25 - 40 |
2. வழக்கு பணியாளர் | 23 - 40 |
3. பல்நோக்கு உதவியாளர் | 21 - 40 |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சேலம் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து 10.02.2025 அன்று அதற்கு முன்னர் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனைத்து அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
நேர்காணல் தேதி | 10.02.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "தமிழ் நாடு அரசு பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு"
Post a Comment