Ad Code

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் ₹.18536/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு

Cuddalore Recruitment 2024

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சமூக பணியாளர் (Social Worker) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடலூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.10.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் குழந்தைகள் நலன் மற்றும்
சிறப்புச் சேவைகள் துறை,
கடலூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் சமூக பணியாளர்
(Social Worker)
காலியிடங்கள் 01
கடைசி தேதி 19.10.2024
விண்ணப்ப முறை தபால்
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் காலியிடம்
1. சமூக பணியாளர் (Social Worker) 01
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. சமூக பணியாளர் (Social Worker): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புப்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பி.எ. சமூக அறிவியல் / சமூகப்பணி / சமூகவியல் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம் அலுவலகத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. சமூக பணியாளர் (Social Worker) 40க்குள்
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் ஊதியம்
1. சமூக பணியாளர் (Social Worker) ₹.18,536/-
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வித்தகுதி, அனுபவத்தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு, சமீபத்தில் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.312, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் - 607001.

கடைசி தேதி: 19.10.2024


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments