-->

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

Admin
By -
0

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு:- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களை நிரப்பிட தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://thoothukudi.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.04.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தூத்துக்குடி
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. ஈப்பு ஓட்டுநர்
2. அலுவலக உதவியாளர்
3. இரவுக்காவலர்
காலியிடங்கள் 04
கடைசி தேதி 07.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 04 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. ஈப்பு ஓட்டுநர் - 01 காலியிடம்
  2. அலுவலக உதவியாளர் - 02 காலியிடங்கள்
  3. இரவுக்காவலர் - 01 காலியிடம்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. ஈப்பு ஓட்டுநர்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியான அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறந்தபட்சம் 5 வருடங்கள் குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

2. அலுவலக உதவியாளர்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

3. இரவுக்காவலர்:-

இந்தப் பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

1. ஈப்பு ஓட்டுநர்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக பொதுபிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதரவற்ற விதவை ஆகிய பிரிவினர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும், ஆதிதிராவிடர் அருந்ததியர் / ஆதிதிராவடர் / பழங்குடியினர் பிரிவினர்களுக்கு 42 வயதுக்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2. அலுவலக உதவியாளர் 3. இரவு காவலர்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக பொதுபிரிவினருக்கு 32 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34 வயதிற்குள்ளும், ஆதரவற்ற விதவை, ஆதிதிராவிடர் அருந்ததியர் / ஆதிதிராவடர் / பழங்குடியினர் பிரிவினர்களுக்கு 37 வயதுக்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

1. ஈப்பு ஓட்டுநர்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.19,500/- - 62,000/- மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. அலுவலக உதவியாளர் 3. இரவு காவலர்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15,700/- - 50,000/- மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://thoothukudi.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், பிறப்பு சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், நன்னடத்தை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், அனுபவம் சான்று நகல்கள், முன்னுரிமை சான்றிதழ் நகல் மற்றும் பிற சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து 07.04.2023 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
கோவில்பட்டி - 628 501.

Notification விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி 07.04.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)