-->

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்!

Admin
By -
0

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு:- திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் (செய்யார் வட்டாரத்தில்) காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://tiruvannamalai.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Page Contents

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், திருவண்ணாமலை
Notification No. ந.க.எண்.566/2022/அ1
நாள்: 20.03.2023
வகை TN Govt Jobs
பணியின் பெயர் வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்கள் 01
கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://tiruvannamalai.nic.in

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. வட்டார ஒருங்கிணைப்பாளர் - 01 காலியிடம்

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MS Office - ல் குறைந்தது ஆறு மாத சான்றிதழ் படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்று இருத்தல் வேண்டும். வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பணியிடமுள்ள ஊராட்சி ஒன்றியத்தின் எல்லை பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 31.01.2023 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின் படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் அதிகாகபூர்வ இணையதளமான https://tiruvannamalai.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 31.03.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம்,
திருவுண்ணாமலை - 606 604.

Click Here
கடைசி தேதி: 31.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)