-->

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!

Admin
By -
0

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்:- மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான முழு விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை madurai.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.02.2023.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மதுரை
Notification No. ந.க.எண்:1085/2022/அ2
நாள்:23.01.2023
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. வட்டார இயக்க மேலாளர்
2. வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website madurai.nic.in


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. வட்டார இயக்க மேலாளர் - உசிலம்பட்டி - 01 காலியிடம்
  2. வட்டார ஒருங்கிணைப்பாளர் - சேடப்பட்டி - 01 காலியிடம், தே.கல்லுப்பட்டி - 01 காலியிடம்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

வட்டார இயக்க மேலாளர்:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 6 மாத M.S.Office சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான பணிகளில் மூன்று வருட முன் அனுபவம் இருக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டார ஒருங்கிணைப்பாளர்:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 3 மாத M.S.Office சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான பணிகளில் மூன்று வருட முன் அனுபவம் இருக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 18 முதல் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிகளுக்கான ஊதிய விபரங்களுக்கு அறிவிப்பாணையை பார்க்கவும்.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மதுரை மாவட்டத்தின் இணையதளமான https://madurai.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 10.02.2023 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

இணை இயக்கநர்/திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
புது நத்தம் ரோடு,
ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில்,
மதுரை.

Download Notification and Application Pdf

கடைசி தேதி: 10.02.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)