இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு | பல்வேறு பணிகள் | தபால் மூலம் விண்ணப்பிக்கவும்
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022: இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரையில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பபடிவத்தை திருக்கோவில் அலுவலகத்தில் ரூபாய் 100 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.10.2022.
![]() |
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பணி |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
பணியின் பெயர் | பல்வேறு பணிகள் |
காலியிடங்கள் | 18 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பணிக்கான காலியிடங்கள்:
திருக்கோயிலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 18.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பதவிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். அதன்படி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், இசைப் பள்ளியில் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள், ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் குறைந்தபட்சம் 2 ஆண்டு படித்தவர்கள், வேத பாடசாலையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படித்தவர்கள், நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்தவர்கள், யானைக்கு பயிற்சி அளித்து கட்டுப்படுத்தி வழி நடத்துபவர்கள், யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழி பேசுபவர்கள், கட்டடப் பொறியியல் படிப்பு படித்தவர்கள், ITI படித்தவர்கள், இயந்திர துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள், மற்றும் உணவு தயாரிக்க தெரிந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பணிக்கான வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் அதிகபட்ச வயது வரம்பு 45 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பணிக்கான ஊதிய விவரம்:
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் நேரில் சென்று ரூபாய்.100/- கட்டணம் செலுத்தி விண்ணப்பப்படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
திருக்கோயிலில் விண்ணப்ப படிவம் பெற்று அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை கவனமாக பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் அனுபவச் சான்றிதழ் மற்ற சான்றிதழ் நகல்களுடன் அதிகாரப்பூர்வ திருக்கோயில் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 07.10.2022 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,
மதுரை.
கடைசி தேதி: 07.10.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Response to "இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022"
Post a Comment