திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

Admin
By -
0

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பாணை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம் மற்றும் அறிவிப்பாணையை திண்டுக்கல் மாவட்ட இணையதளமான dindigul.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 13.10.2022 பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNRD Recruitment 2022
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

துறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, திண்டுக்கல் மாவட்டம்
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

வேடசந்தூர் அலுவலக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள்:

  • வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு மொத்த காலியிடங்கள் 03 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வேடசந்தூர் அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வித்தகுதி:

  • அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கூடுதலாக மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வேடசந்தூர் அலுவலக உதவியாளர் பணிக்கான இனசுழற்சி விவரங்கள்:

    ஆதிதிராவிடர் (அருந்ததியர்) பெண்கள் (ஆதரவற்ற விதவைகள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்களைத் தவிர)

    வேடசந்தூர் அலுவலக உதவியாளர் பணிக்கான வயது வரம்பு:

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர் அலுவலக உதவியாளர் பணிக்கான ஊதிய விவரம்:

    இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 15,700-லிருந்து அதிகபட்சமாக ரூ.50,000/- வரைக்கும் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர் அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேர்வு கட்டணம், மற்றும் விண்ணப்பக் கட்டணம் கட்ட வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    வேடசந்தூர் அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

    இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர் அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் இணையதளமான www.dindigul.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்ப வேண்டும்.

    வேடசந்தூர் அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

    ஆணையாளர்,
    ஊராட்சி ஒன்றியம்,
    வேடசந்தூர்.

    Download Notification and application format pdf

    கடைசி தேதி:13.10.2022

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)