பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தை நலக்குழுவில் காலியாக உள்ள உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.09.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://perambalur.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் |
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, பெரம்பலூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் |
காலியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 16.09.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர்: 12-ம் வகுப்பு தேர்ச்சி, இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதாவதொரு நிறுவனத்தில் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் | 42-ற்குள் |
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் | ₹.11,916/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 164, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் மாவட்டம் - 621212.
அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 16.09.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments